கார் திருடிய வாலிபர் கைது

கார் திருடிய வாலிபர் கைது. பின்னர் அவரிடம் இருந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-03-24 22:15 GMT
உடையார்பாளையம்,

உடையார்பாளையம் அருகே உள்ள வானத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரகுமார் மகன் வசந்தகுமார்(வயது 26). இவர் தனியார் கார் வாடகை நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வானத்திரையான்பட்டினத்தில் இருந்து பெரம்பலூர் வரை காரில் வாடகைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு காரில் வந்து கொண்டு இருந்தார். மேலும் கடலூர் மாவட்டம் கார்குடல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் வசந்தகுமாரிடம் காரை வாடகைக்கு கேட்டு புதுச்சேரி சென்ற போது இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வானத்திரையான்பட்டினம் கிராமத்தில் உள்ள வசந்தகுமார் வீட்டிற்கு வந்து மணிகண்டன் தங்கியுள்ளார். பின்னர் நேற்று காலையில் வசந்தகுமார் எழுந்து பார்த்தபோது, மணிகண்டன் மற்றும் காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தகுமார் இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து காரை திருடிய மணிகண்டனை தேடிவந்தார். இந்நிலையில் நேற்று காலை தர்மபுரியில் காரை திருடி சென்ற மணிகண்டன் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்