லாரி டிரைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் சிக்கினர்

சின்னமனூர் அருகே லாரி டிரைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-24 21:45 GMT
அல்லிநகரம்,

சின்னமனூர் அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் ராஜு(வயது 32). லாரி டிரைவர். இவர் கொடைக்கானலில் இருந்து தேனிக்கு லாரியில் வந்து கொண்டு இருந்தார். வழியில் அல்லிநகரத்துக்கு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி(37), மணிபிரபு(25), விவேக்(25) ஆகிய 3 பேர் லாரியை வழிமறித்து மது குடிக்க ராஜுவிடம் பணம் கேட்டனர். இதற்கு ராஜு மறுக்கவே 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து ராஜு அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தி, மணிபிரபு ஆகிய 2 பேரை கைது செய்தார். விவேக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்