உடைந்த மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனே அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-05-02 22:30 GMT
உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த மணகெதி கிராமத்தில் உள்ள வன ஆராய்ச்சி மையம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த மின்கம்பத்தின் மேல் பகுதி உடைந்துள்ளது. திருச்சி- சிதம்பரம் சாலையில் தினமும் ஏராளமான பஸ், லாரி, கார், வேன், சரக்கு வாகனம் உள்பட பல்வேறு வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இந்நிலையில் உடைந்த நிலையில் உள்ள மின்கம்பம் சாலையில் விழுந்தால் பெரும் அளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனே அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்