தினத்தந்தி-வி.ஜி.பி. நடத்தும் கோடை விழாவில் நாளை, நடனப்போட்டி வெற்றி பெறுபவர்களுக்கு விதவிதமான பரிசுகள்

தினத்தந்தி-வி.ஜி.பி. இணைந்து நடத்தும் கோடை விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் நடனப்போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வித விதமான பரிசுகள் வழங்கப் பட இருக்கின்றன.

Update: 2019-05-17 23:00 GMT
சென்னை,

தினத்தந்தியும், வி.ஜி.பி.யும் இணைந்து தங்கள் வாசகர்களுக்காகவும், வாடிக்கையாளர்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் வி.ஜி.பி. தங்க கடற்கரையில் ‘கோடை விழா’ என்ற பெயரில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான போட்டிகளின் நிறைவு நிகழ்வாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வி.ஜி.பி. தங்க கடற்கரையில் உள்ள புல்வெளியில் மாபெரும் நடனப்போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் 10 முதல் 25 வயது வரை உள்ள இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

விதவிதமான பரிசுகள்

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசு எல்.ஈ.டி. கலர் டி.வி, இரண்டாம் பரிசு பிரிட்ஜ், மூன்றாம் பரிசு ஆடியோ சிஸ்டம் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்கிறவர்களில் ஏராளமானவர்களுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் வி.ஜி.பி. தங்க கடற்கரையில் அமைந்துள்ள கவுண்ட்டரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்திட வேண்டும். நடனப்போட்டிக்கு பிரபல சினிமா நடன அமைப்பாளர் விஜி சதீஷ் நடுவராக இருந்து பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்து, பரிசுகளை வழங்குவார். போட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு நுழைவுக்கட்டணம் திரும்பத்தரப் படும்.

மேலும் செய்திகள்