“இந்து மத அடையாளங்களை அழிப்பதற்கு தேர்தலை பயன்படுத்துகிறார்” கமல்ஹாசன் மீது, எச்.ராஜா குற்றச்சாட்டு

இந்து மத அடையாளங்களை அழிப்பதற்கு கமல்ஹாசன் தேர்தலை பயன்படுத்துகிறார் என பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2019-05-19 23:00 GMT
கும்பகோணம்,

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் கூறி உள்ளார். இவ்வாறு கூறி விட்டு அவர் எப்படி தன்னை இந்து என கூற முடியும்? இதில் உள்நோக்கம் உள்ளது.

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் திட்டமிட்டு பேசி உள்ளார். இந்து என்ற அடையாளம் தேவையில்லை என்பதற்காக கமல்ஹாசன் இப்படி பேசி உள்ளார். அவர் இந்து மதத்தை பற்றி பேசியதில் மிகப்பெரிய சதி உள்ளது.

அழிப்பதற்காக...

இந்து மத அடையாளங்களை அழிப்பதற்காக கமல்ஹாசன், தேர்தலை பயன்படுத்துகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவை பற்றியும், இந்து மதத்தை பற்றியும் உலக அளவில் பெருமிதமாக பேசி வருகிறார்கள். இந்து மதம் அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்லும் மதம் என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலுக்கு எச்.ராஜா தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்று சிறப்பு யாக பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். 

மேலும் செய்திகள்