திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் சிக்கிய 2 வாலிபர்கள் போலீசார் கைது செய்து விசாரணை

ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்கள் பாடாலூர் மேம்பாலம் அருகே உள்ள வேகத்தடையில் மோதி கீழே விழுந்தனர்.

Update: 2019-05-26 22:15 GMT
பாடாலூர்,

ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்கள் பாடாலூர் மேம்பாலம் அருகே உள்ள வேகத்தடையில் மோதி கீழே விழுந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என தெரிய வந்தது. மேலும் அவர்கள் துறையூர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் இளவரசன்(வயது 21), கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் மகன் அரவிந்தன்(20) என்பது தெரிந்தது. இவர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்