திருவாரூரில் இருந்து மானாமதுரைக்கு அரவைக்காக 950 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூரில் இருந்து மானாமதுரைக்கு அரவைக்காக 950 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-07-13 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டன. இந்த நெல் மூட்டைகள் பொது வினியோக திட்டத்தில் அரிசியாக வழங்குவதற்காக அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

950 டன் நெல்

அதன்படி நேற்று திருவாரூரை சுற்றி உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள் 68 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இதனையடுத்து லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 950 டன் நெல் மானாமதுரைக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்