ஆண்டிப்பட்டி அருகே, மண் அள்ளிய 2 பேர் கைது - 4 லாரிகள் பறிமுதல்

ஆண்டிப்பட்டி அருகே கணவாய் மலையடிவார பகுதியில் மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-12 22:30 GMT
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் கிராவல் மண் லாரிகளில் அனுமதியின்றி அள்ளப்படுவதாக தேனி மாவட்ட கனிமவள துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து ஆண்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண தெய்வேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கணவாய் மலையடிவாரப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 4 லாரிகளில் சிலர் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பியோடி விட்டனர். 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் லாரி டிரைவரான மதுரை மாவட்டம், திருமங்கலம் அனுப்பப்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் ஜெயக்கண்ணன் (வயது 27), திம்மரசநாயக்கனூர் அருகே உள்ள பிள்னைமுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மகன் கண்ணன் (33) என்றும், அனுமதியின்றி மண் அள்ளுவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மண் அள்ளி செல்ல பயன்படுத்தப்பட்ட 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்