திருநெல்வேலி-காந்திதாம் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் 15-ந்தேதி ரத்து
திருநெல்வேலி-காந்திதாம் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் 15-ந்தேதி (வியாழக்கிழமை) ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல நீண்டதூர ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. திருநெல்வேலியில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 19423) ரெயில் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவலை மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.