அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரசு தலைமை கொறடா வழங்கினார்.

Update: 2019-09-19 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், 45 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.52 ஆயிரத்து 862 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மூலம் தலா ரூ.17 ஆயிரம் வீதம் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதிக்கான காசோலைகளும், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.13 ஆயிரத்திற்கான காசோலைகளும் மொத்தம் 74 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 31 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, ஆவின் பால்வள துணைத் தலைவர் தங்க.பிச்சமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்