இரணியல் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விபரீதம்

இரணியல் அருகே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-22 22:15 GMT
இரணியல்,

இரணியல் அருகே ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 31), டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இதனால், கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ்குமார் தூங்க செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அறைகதவு திறக்கப்படவில்லை.

தற்கொலை

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மகேஷ்குமார் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி            கொண்டிருந்தார். இதைப்பார்த்ததும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்