மாநில அளவிலான வலைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு

14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவுகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் வீதம் 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2019-09-28 22:30 GMT
குன்னம்,

தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் இந்திய பள்ளிக்கல்வி குழுமம் இணைந்து மாவட்டங்களுக்கு இடையே 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான வலைப்பந்து போட்டி பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரிசைப்பட்டி கிராமத்தில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. இதில் உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் வரவேற்றார். போட்டி தேர்வில் 16 மாவட்டங்களையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவுகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் வீதம் 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தமிழ்நாடு அணியாக தேசியப்போட்டிகளில் பங்கு பெறுவார்கள். போட்டிகளில் நடுவராக பாண்டியன், கண்ணன், செல்வகுமார், நாகராஜன், அதியமான், அன்பரசு, செந்தில்குமார் உள்பட பலர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் புஷ்பராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்