திருவாரூரில், வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவாரூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-11-17 22:00 GMT
திருவாரூர்,

சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வேலை முடிந்ததும் காயத்ரி வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காயத்ரி திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்