ஆத்தூரில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது

ஆத்தூரில் கள்ள நோட்டை மாற்ற முயன் றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-21 23:00 GMT
ஆத்தூர்,

ஆத்தூர் புதிய பஸ்நிலையம் எதிரில் பழக்கடை நடத்தி வருபவர் ராஜ்குமார் (வயது 40). இவரது கடைக்கு நேற்று மாலை சந்தேகப்படும்படியாக ஒருவர் வந்தார். பின்னர் அவர், பழங்களை வாங்கிக்கொண்டு ரூ.500-ஐ கொடுத்தார். ஆனால் அவர் கொடுத்தது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார் இதுபற்றி ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

கைது

பிடிபட்டவர் பெத்தநாயக்கன்பாளையம் மேற்கு ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய சோதனையில், ரூ.14,700 கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்ததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளநோட்டை மாற்ற முயன்றதாக பழனிவேலை கைது செய்தனர். இவருக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்