காஞ்சீபுரம் அருகே, பெண் போலீஸ் தற்கொலை
காஞ்சீபுரம் அருகே குடும்பத்தகராறு காரணமாக பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த வையாவூர் பிரதான சாலையில் உள்ள அண்ணா அவென்யூவில் வசித்து வந்தவர் கோமதி (வயது 38). விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தின் முதல் நிலை போலீசாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சிவா திருப்பத்தூரை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வையாவூரில் வீட்டில் வசித்து வந்த பெண் போலீஸ் கோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.