ஆசிரியை தற்கொலைக்கு முயன்ற சம்பவம்; தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு

சிவகங்கை, தலைமை ஆசிரியை திட்டியதால் ஆசிரியை தற்கொலைக்கு முயன்றார். இதுக்குறித்து தலைமை ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்.

Update: 2019-12-02 21:30 GMT
சிவகங்கை, 

சிவகங்கை டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(வயது48). இவர் சிவகங்கையை அடுத்த முத்துபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 27-ந்தேதி இவரை, பள்ளி தலைமை ஆசிரியை கீதாஞ்சலி திட்டியதால் அறிவியல் ஆய்வகத்தில் இருந்த திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்பு அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். இந்தநிலையில் ஆசிரியை சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ, தலைமை ஆசிரியை கீதாஞ்சலி மீது வழக்கு பதிவு செய்தார்.

மேலும் செய்திகள்