ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் பலி

ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-12-05 22:15 GMT
அரக்கோணம், 

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 8-வது பிளாட்பாரம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரெயிலில் அடிபட்டு இறந்தவர் ஜோலார்பேட்டையை சேர்ந்த கார் டிரைவர் ரங்கநாதன் (வயது 47) என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்