குடும்பம் நடத்த மனைவி வராத விரக்தியில் வி‌‌ஷம் குடித்த கொத்தனார் சாவு

ராதாபுரம் அருகே குடும்பம் நடத்த மனைவி வராத விரக்தியில் வி‌‌ஷம் குடித்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-12-30 22:45 GMT
ராதாபுரம், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 28) கொத்தனார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கருப்பசாமி, மீனாட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீனாட்சி தனது கணவரை பிரிந்து தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கருப்பசாமி மீனாட்சியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இதனால் விரக்தி அடைந்த கருப்பசாமி கடந்த 23-ந் தேதி வி‌‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்