நெல்லையில் செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2020-01-04 22:30 GMT
நெல்லை,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பாலத்தின் கீழ் அமைந்திருக்கும் செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனு‌‌ஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்