சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது
போளூர் தாலுகா தும்பகாடு கீழூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி மேனகா (வயது 35). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்ற போது போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
மேனகா மீது சாராய விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார்.
அதைத் தொடர்ந்து மேனகாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.