சுரண்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

சுரண்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-03-13 22:00 GMT
சுரண்டை, 

சுரண்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மின்வாரிய ஊழியர் மனைவி 

தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் மாடசாமி. இவர் சேர்ந்தமரம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 45). கணவன்– மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 11–ந் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கலைச்செல்வி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாடசாமி தீயை அணைத்து கலைச்செல்வியை மீட்டார். பலத்த தீக்காயங்களுடன் இருந்த கலைச்செல்வி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பரிதாப சாவு 

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

மின்வாரிய ஊழியரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேர்ந்தமரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்