கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு: மனைவி, உறவினர்களிடம் போலீசார் விசாரணை

கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு: மனைவி, உறவினர்களிடம் போலீசார் விசாரணை.

Update: 2020-07-31 00:21 GMT
அம்பை,

அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு பள்ளிக்கூடத்தெரு பொதுப்பணித்துறை குடியிருப்பை சேர்ந்தவர் கனகசபாபதி (வயது 54). இவர் அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பதிவுரு எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மணிமுத்தாறு கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கனகசபாபதியின் மனைவி இந்திரா (50) மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்