அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர், பெரம்பலூரில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளிலும் தலா ஒருவருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என மொத்தம் 7 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 472 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4, 175 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 514 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் 2 பேருக்கும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,214 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2, 136 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 57 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 484 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.