உடையார்பாளையம் அருகே குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை மனைவி-மகன் கைது
உடையார்பாளையம் அருகே குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை அடித்துக்கொன்ற மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.;
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வாத்திகுடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் தவசீலன் (வயது 45). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுதா (42). இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 17 வயது மற்றும் 13 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பும், இளைய மகன் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தவசீலனுக்கும், சுதாவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அதே ஊரில் வாடகை வீட்டில் சுதா தனது மகன்களுடனும், தவசீலன் சொந்த வீட்டிலும் வசித்தனர்.
கட்டையால் தாக்கினர்
கேரளாவில் இருந்து தவசீலன் 3 மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊர் வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஊருக்கு வந்த தவசீலன், குடிபோதையில் சுதா வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளைய மகனின் கழுத்தை பிடித்து தவசீலன் நெரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுதா, மூத்த மகன் ஆகியோர் சேர்ந்து தவசீலனை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயங்கினார். இதையடுத்து சுதாவும், மூத்த மகனும் சேர்ந்து தவசீலனை தூக்கிச்சென்று, அவருடைய சொந்த வீட்டில் விட்டுவிட்டு, தாங்கள் வசிக்கும் வீட்டிற்கு வந்துவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை தவசீலன் வீட்டில் இறந்து கிடந்தார்.
கைது
இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தவசீலனின் உடலை கைப்பற்றி, ஜெயங்ெகாண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சுதாவும், மூத்த மகனும் சேர்த்து தாக்கியதில் தவசீலன் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த ேபாலீசார், சுதா மற்றும் மூத்த மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை அடித்துக்கொன்றதாக மனைவி, மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வாத்திகுடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் தவசீலன் (வயது 45). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுதா (42). இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 17 வயது மற்றும் 13 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பும், இளைய மகன் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தவசீலனுக்கும், சுதாவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அதே ஊரில் வாடகை வீட்டில் சுதா தனது மகன்களுடனும், தவசீலன் சொந்த வீட்டிலும் வசித்தனர்.
கட்டையால் தாக்கினர்
கேரளாவில் இருந்து தவசீலன் 3 மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊர் வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஊருக்கு வந்த தவசீலன், குடிபோதையில் சுதா வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளைய மகனின் கழுத்தை பிடித்து தவசீலன் நெரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுதா, மூத்த மகன் ஆகியோர் சேர்ந்து தவசீலனை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயங்கினார். இதையடுத்து சுதாவும், மூத்த மகனும் சேர்ந்து தவசீலனை தூக்கிச்சென்று, அவருடைய சொந்த வீட்டில் விட்டுவிட்டு, தாங்கள் வசிக்கும் வீட்டிற்கு வந்துவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை தவசீலன் வீட்டில் இறந்து கிடந்தார்.
கைது
இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தவசீலனின் உடலை கைப்பற்றி, ஜெயங்ெகாண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சுதாவும், மூத்த மகனும் சேர்த்து தாக்கியதில் தவசீலன் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த ேபாலீசார், சுதா மற்றும் மூத்த மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை அடித்துக்கொன்றதாக மனைவி, மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.