நன்னிலம் அருகே பஸ் மோதி தொழிலாளி சாவு டிரைவர் கைது

நன்னிலம் அருகே பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதில் தொடர்புடைய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-08 02:39 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா குவளைக்கால் காலனி தெருவைச் சேர்ந்தவர் தங்கையன்(வயது62). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். தங்ைகயனுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் நேற்று குவளைக்கால் கிராம நிர்வாக அலுவலகத்தில் பொங்கல் வேட்டி- சேலை வாங்கிக்கொண்டு திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் வீட்டிற்கு திருவாரூர் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மயிலாடுதுறையில் இருந்து வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக தங்ைகயன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது தங்கையனின் உடலை பார்த்த அவரது மகள்கள் கதறி அழுதது அனைவர் நெஞ்சையும் உருக்கியது.

டிரைவர் கைது

தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். இதில் உரிய நடவடிக்ைக எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்படடது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் ராம்கி(33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தங்கையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பஸ்மோதி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்