உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-01-21 23:28 GMT
வாகனம் மோதியது
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 65). இவர் நேற்று அதிகாலை உத்திரமேரூர் செல்வதாக கூறி விட்டு சென்றார். நேற்று காலை உத்திரமேரூர்-காஞ்சீபுரம் சாலையில் தட்டான்குளம் அருகே செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

சாவு
இது குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்