மதுப்பழக்கத்தை கைவிட கூறியதால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்

புதுமாப்பிள்ளை தற்கொலை

Update: 2021-01-31 05:40 GMT
கணபதி
கோவை சிவானந்தாகாலனி பட்டேல் வீதியை சேர்ந்தவர் சந்தீப்குமார் (வயது32). கட்டிட தொழிலாளி. இவருக்கும் சுரிதா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

 சந்தீப்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே குடிப்பழக்கத்தை கைவிடுமாறு சுரிதா கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று சந்தீப்குமார் மது குடித்து வீட்டுக்கு  வந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சந்தீப்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்தார். 

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்