விஷம் தின்று பெண் தற்கொலை

விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2021-01-31 05:45 GMT
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூண்டி கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜனின் மனைவி மங்கையர்க்கரசி(வயது 50). இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். மேலும் அவரது மகனுக்கு பெண் பார்த்து வந்த நிலையில், வரன் ஏதும் சரியாக அமையாததால் கூடுதல் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 26-ந் தேதி தற்கொலை செய்து கொள்ள எண்ணி வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்