மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் கருப்பண்ண பிள்ளைசந்து பகுதியை சேர்ந்த பீர்ஒலி மகன் இம்ரான் ஹாலித் (வயது 22).
இவர் பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இம்ரான் ஹாலித்தை போலீசார் கைது செய்தனர்.