தையல் கடையில் திருட்டு

தையல் கடையில் திருட்டு

Update: 2021-02-01 06:30 GMT
சிவகாசி,
சிவகாசி சோலை காலனியை சேர்ந்தவர் வசந்தி (வயது 54). இவர் பெரியகருப்பன்நாடார் ரோட்டில் தையல் கடை நடத்தி வருகிறார். கடையில் ரூ.77 ஆயிரம் மற்றும் ஒரு ஐ பேடு ஆகியவை வைத்திருந்தார். இந்த நிலையில் இதை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வசந்தி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்