மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-02-01 19:10 GMT
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த பல நாட்களாக ஒற்றை இலக்க எண்களுடன் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில்,  நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில், முனையனூர் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், காந்தி கிராமத்தை சேர்ந்த 34 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்