சமயபுரம்
திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த தச்சங்குறிச்சி வனப்பகுதி அருகே சாலையில் நேற்று காலையில் ஒரு புள்ளிமான் வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் புள்ளிமான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மான் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து செத்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேதபரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். மேலும் மான் மீது மோதிய வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த தச்சங்குறிச்சி வனப்பகுதி அருகே சாலையில் நேற்று காலையில் ஒரு புள்ளிமான் வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் புள்ளிமான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மான் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து செத்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேதபரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். மேலும் மான் மீது மோதிய வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.