புனித அருளானந்தர் ஆலய திருவிழா

புனித அருளானந்தர் ஆலய திருவிழா நடைபெற்றது.

Update: 2021-02-05 05:41 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள புனித அருளானந்தர் ஆலய 31-ம் ஆண்டு திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டு கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜேம்ஸ் தலைமையில் சப்பர பவனி நடைபெற்றது. இதையொட்டி புள்ளம்பாடி மறைமாவட்ட பங்குத்தந்தை ஹென்றி புஷ்பராஜ், ஏலாக்குறிச்சி பங்குத்தந்தை சுவக்கீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் புனித அருளானந்தர் சப்பரம் சிறப்பு அலங்காரங்களோடு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக பவனி சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவில் அப்பகுதிைய சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்