அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் ஒருவா் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்.
அரியலூா்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. தற்போது அரியலூர் மாவட்டத்தில் 20 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேரும் கொரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.