தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-02-08 11:29 IST
உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 55). கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கு மரம் வெட்டிக்கொடுத்து, அதை விற்று தரும்படி கூறியுள்ளார். இந்நிலையில் ரஜினி(42) என்பவர் அந்த மரத்தை விற்றதாக தெரிகிறது. இது பற்றி தமிழரசன், ரஜினியிடம் கேட்டபோது, அவர் ஆத்திரமடைந்து தமிழரசனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த தமிழரசன் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் தமிழரசனின் தந்தை கலியபெருமாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரஜினியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்