கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு

கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி பாராட்டப்பட்டார்.;

Update:2021-02-17 00:08 IST
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி கவுரிசங்கரி 14-16 வயது அடிப்படையில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். அவருக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவி கவுரிசங்கரியை, பள்ளி தலைமை ஆசிரியர் கங்காதேவி பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்