அரியலூரில் 3 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-02-19 19:02 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும் என மொத்தம் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொனேராவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 371 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 169 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்