அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-02-20 19:05 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து வசிப்பவர்களில் 2 பேர் நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 339 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 129 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்