சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

உடையார்பாளையம் பகுதியில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2021-02-21 18:37 GMT
உடையார்பாளையம்:

சேதமடைந்த சாலை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்- முனியத்திரையான்பட்டி வழியாக கழுமங்கலம், நகல்குழி, செந்துறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் இந்த சாலை சேதமடைந்துள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதோடு குண்டும், குழியுமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், விவசாயத்திற்கான மூலப்பொருட்களை இந்த சாலை வழியாக கொண்டு செல்லும் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சீரமைக்க கோரிக்கை
மழை பெய்யும்போது பள்ளம், குழியில் மழைநீர் தேங்குகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனத்தை ஓட்டும்போது, நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்து செல்கின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துமனைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் குண்டும், குழியுமாக இந்த சாலையில் செல்லும்போது, வாகனங்கள் வேகமாக இயக்க முடியாத நிலையில், சரியான நேரத்திற்கு பள்ளி, மருத்துவமனைக்கு செல்ல முடிவதில்லை. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்