அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-02-21 18:46 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பேருக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வசிப்பவர்களில் ஒருவருக்கும் என மொத்தம் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 12 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 5 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 174 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 95 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்