புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-22 19:02 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் வெள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குறலரசன்(வயது 24), அதே பகுதியை சேர்ந்த சந்துரு (55) ஆகியோர் அவர்களது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்