விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது;

Update:2021-02-25 01:30 IST
அரியலூர்
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். மேலும் கொரோனோ காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்