அங்கன்வாடி ஊழியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகில் அங்கன்வாடி மைய ஊழியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமையில் இரவு, பகலாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக்கோரி நடைபெறும் இந்த போராட்டம் நேற்றும் 4-வது நாளாக நடைபெற்றது.