ராஜபாளையம்,
ராஜபாளையம் ஆவரம்பட்டி ஆத்திச்சூடி மந்தை காளியம்மன் கோவிலில் மாசி மகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.