காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாக்குப்பதிவு எந்திரங்கள்; கலெக்டர் வழங்கினார்

சட்டமன்ற தேர்தலையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 5 சதவீதம் பொதுமக்களின் தேர்தல் விழிப்புணர்வுக்காகவும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளின் பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது.

Update: 2021-03-01 12:44 GMT
இதனை காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்