அரசு கலைக்கல்லூரிக்கு புத்தகங்கள்

அரசு கலைக்கல்லூரிக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி;

Update:2021-03-03 00:08 IST
கரூர்
கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், உடற்பயிற்சி ஆசிரியருமான வீரத்திருப்பதி, உடல் பயிற்சி செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மாணவ-மாணவிகளின் நலன்கருதியும் 124 புத்தகங்களை கல்லூரிக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி முன்னிலையில் கல்லூரி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜன், உடல்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், தமிழ்த்துறை தலைவரும், நூலக பொறுப்பாளருமான சுதா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்