வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-03-03 16:45 GMT
மேலூர்,
மேலூரில் உள்ள முனியாண்டிகோவில் தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் (வயது58). கூலித்தொழிலாளியான இவர் வேலை முடிந்து மதுரை நான்கு வழி சாலையில் முனிக்கோவில் என்னுமிடத்தில் நடந்து வந்தார். அப்போது அவரை இருவர் வழி மறித்து மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றுவிட்டதாக மேலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கீழவளவை சேர்ந்த பிரகாஷ் (26) மற்றும் அதே ஊரை சேர்ந்த தேவன் ஆகிய 2 பேரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்