வாலிபரை அரிவாளால் வெட்டிய கண்டக்டர்

தா.பழூர் அருகே வாலிபரை கண்டக்டர் அரிவாளால் வெட்டினார்.

Update: 2021-03-05 20:51 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 45). அரசு பஸ் கண்டக்டரான இவர் நேற்று சாலையோரத்தில் சென்றவாறு, அந்த வழியாக வந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெய்சங்கர் கையில் வைத்திருந்த அரிவாளால், பரண் அமைக்கும் வேலை செய்த கலைவாணனின்(35) தலையில் வெட்டியதாகவும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதைக்கண்ட கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து, ஜெய்சங்கரை பிடித்து சாலையோரத்தில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த கலைவாணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் அங்கு வந்து ஜெய்சங்கரை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்சங்கர் கொடுத்த புகாரில், தனக்கும், மதனத்தூரை சேர்ந்த அருணாசலம் மகன் சுப்பிரமணியனுக்கும் சொத்து தகராறு இருப்பதாகவும், அவருடைய உறவினரான சின்னப்பா மகன் கலைவாணன் தகாத வார்த்தைகளை சொல்லி தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, கட்டையால் தாக்கியதாகவும், கூறியிருந்தார். அதன்பேரில் கலைவாணன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்