சாத்தூர்,
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய கொல்லபட்டி விலக்கு அருகில் மதுபாட்டில் விற்ற படந்தாலை சேர்ந்த தங்கமுத்துக்குமரவேல் பாண்டியன் (வயது 51) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில் மற்றும் அதேபகுதியில் பஸ் ஸ்டாப் அருகில் மதுபாட்டில் விற்ற அமீர்பாளையத்தை சேர்ந்த மாடசாமி (50) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.