வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் 115 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன், இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர் சங்கர கிருஷ்ணமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.